குரு பெயர்ச்சி 2025: எந்த ராசிகளுக்கு அதிக நன்மை நடக்கும் வாங்க பார்க்கலாம்!..
Gurupeyarchi Palangal 2025
Gurupeyarchi Palangal 2025: குரு பகவான் அறிவு, செல்வம், செழிப்பு, குழந்தைகள் மற்றும் திருமண வாழ்க்கை ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக கருதப்படுகிறார். அவர் தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதி, இந்த ராசிக்காரர்கள் எப்போதும் குருவின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.

குரு பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. மே மாதம் நிகழவுள்ள குரு பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு அதிக நன்மைகள் நடக்கும் என இந்த பதிவில் காணலாம்.

அறிவின் நாயகன், செல்வத்தின் அதிபதி, செல்வங்களின் வள்ளல் என பல வகையில் நம் வாழ்க்கைக்கு அருள் புரியும் குரு பகவான் நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். இவர் பல வித நற்பலன்களை அளிக்கும் சுப கிரகம் ஆவார்.

குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் மே 14 ஆம் தேதி இரவு 11:20 மணிக்கு மிதுன ராசிக்குள் நுழைகிறார். குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் குரு பெயர்ச்சி பெரிய வகையில் அனுகூலமான பலன்களை அளிக்கும். இவர்களுக்கு இந்த நேரம் ஒரு பொற்காலமாய் திகழும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணி இடத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் சாத்தியமாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, குரு பெயர்ச்ச்சி 2025 ரிஷப ராசிக்காரர்களின் மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கும். பணியிடத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் விரும்பிய முறையில் முடிக்கப்படும். குருவின் செல்வாக்கால், திருமண வாழ்க்கையில் அன்பும் நம்பிக்கையும் நிலவும். உறவுகள் முன்பை விட வலுவாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும்.

சிம்மம்: மிதுனத்தில் குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு வலுவடையும். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். பண வரவு அதிகமாகும். வேலையில் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் திட்டங்கள் வெற்றிகரமாகவும் இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி 2025 பெரிய வழியில் நன்மை பயக்கும். முதலீடு, தொழில் மற்றும் உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களின் சம்பளம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கு இப்போது சங்கடங்கள் நீங்கும். காதல் உறவுகளில் நெருக்கம் இருக்கும். தொடர்ந்து புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

படிப்பில் கவனம் அதிகரித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், கல்வி, கெள்விகளில் சிறந்து விளங்கவும், மாணவர்கள் தினமும், ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ’ என்ற ஸ்லோகத்தை தினமும் கூறலாம்.

இது தவிர, ‘ஓம் விருஷபத் வஜாய வித்மஹே, க்ருணி ஹஸ்தாய தீமஹி, தந்நோ குருஹ் ப்ரசோதயாத்’ என்ற குரு காயத்திரி மந்திரத்தை தினமும் அல்லது குறைந்தபட்சம் வியாழக்கிழமைகளிலாவது 108 முறை ஜபித்து வந்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. Tamiljobs360 இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.